உள்ளூர் செய்திகள் (District)

மாயமான வேணுகோபால்.

முதியவர் மாயம்

Published On 2022-11-23 10:03 GMT   |   Update On 2022-11-23 10:03 GMT
  • சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்த முதியவர் மாயமானர்
  • இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.

ேசலம்:

சேலம் அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் வேணுகோபால் கடந்த 21-ந்தேதி 4 ரோடு பூக்கடை காம்ப்ளக்ஸ் பஸ் நிறுத்தம் அருகே வசித்து வரும் தன்னுடைய தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் உறவினர்கள், பல்வேறு இடங்களில் வேணுகோபாலை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேணுகோபாலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News