உள்ளூர் செய்திகள்

தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2022-10-29 15:38 IST   |   Update On 2022-10-29 15:38:00 IST
  • தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டியன். இவரது மனைவி ஜீவா (வயது 40). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வபாண்டியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜீவாவுக்கு உதவியாக அவருடன், அவரது தாய் சின்னம்மாள் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஜீவா சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் சின்னம்மாள் கடைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த ஜீவா திடீரென்று மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறியபடி ஜீவா வீட்டின் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஜீவா மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜீவா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News