உள்ளூர் செய்திகள்

தந்தை, மகனுக்கு கத்திக்குத்து

Published On 2022-11-24 09:44 GMT   |   Update On 2022-11-24 09:44 GMT
  • பெண் உள்பட 3 பேர் கைது
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 40). இவரது மகன் ஜனா. நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்க ஜனா அருகில் இருந்த கடைக்கு சென்றார்.

பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் போது அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (28) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜனா தனது தந்தை ஜாவித்தை அழைத்து வந்ததாக வும், பிரதாப் உறவினரான அருண் (28), சுகன்யா (26) ஆகியோரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது‌.

பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதாப், சுகன்யா, அருண் ஆகியோர் கத்தியால் ஜாவித், ஜனாவை குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.

இது குறித்து ஜாவித் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதாப், அருண் சுகன்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News