உள்ளூர் செய்திகள்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

Published On 2022-11-11 09:12 GMT   |   Update On 2022-11-11 09:12 GMT
  • மாரியப்பன் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
  • போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

கோவை,

கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரியப்பனை குத்திவிட்டு தப்பினார்.

இதில் காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியப்பன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News