உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

தொழிலாளர்கள் சாலை மறியல்

Published On 2022-12-14 10:10 GMT   |   Update On 2022-12-14 10:10 GMT
  • மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
  • கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்.

சீர்காழி:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்காழி அடுத்த பச்சை பெருமா நல்லூரில் பொதுமக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் வேலை வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழை கால நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட வில்லை.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடை பெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News