இந்தியா (National)

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்றுவந்த தங்கங்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

Published On 2024-09-25 14:11 GMT   |   Update On 2024-09-25 14:11 GMT
  • செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று அசத்தியது.
  • தங்கம் வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

 


இந்த நிலையில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News