இந்தியா

பிரதமர் மோடி உரை- எதிர்க்கட்சிகள் அமளி

Published On 2024-07-03 07:11 GMT   |   Update On 2024-07-03 07:11 GMT
  • அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
  • எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

* தற்போது பலர் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

* அரசியல் சாசனத்தின் பெருமைகளை நாடு முழுவதும் பரப்புவது என் கடமை.

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

Tags:    

Similar News