இந்தியா

இன்றுடன் ஓய்வு.. போர் நினைவிடத்தில் மரியாதை செய்த ராணுவ தளபதி - வீடியோ

Published On 2024-06-30 05:10 GMT   |   Update On 2024-06-30 05:10 GMT
  • ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
  • ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் 29-வது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 2022-ம் ஆண்டு பதவியேற்றார்.

அதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் என்ஜினீயர்ஸ் படை பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு ஜூன் 30 வரை ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

மனோஜ் பாண்டே பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவிக்காலத்திற்கு பிறகு இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.

Tags:    

Similar News