இந்தியா

அவுரங்கசீப் கல்லறை விவகாரம் தேவையற்றது - RSS மூத்த தலைவர் கருத்து

Published On 2025-04-01 08:28 IST   |   Update On 2025-04-01 08:28:00 IST
  • சாவா படம் மகாராஷ்டிராவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
  • அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று நாக்பூரில் கலவரம் வெடித்தது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி கதையை தழுவி எடுக்கப்பட்ட சாவா படம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, முகலாய பேரரசர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து நாக்பூரில் கலவரம் வெடித்தது.

இந்நிலையில், அவுரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சை "தேவையற்றது" என்று ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சுரேஷ் பையாஜி ஜோஷி, "அவுரங்கசீப் இங்கே மரணமடைந்தார், அதனால் அவரது கல்லறை இங்கு கட்டப்பட்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் அப்சல் கானின் கல்லறையை கட்டி நமக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இது இந்தியாவின் பரந்துபட்ட மனப்பான்மையையும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் காட்டுகிறது. அவுரங்கசீப் கல்லறை அப்படியே இருக்கட்டும், அதைப் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News