இந்தியா (National)

எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு- வீடியோ வைரல்

Published On 2024-09-23 02:38 GMT   |   Update On 2024-09-23 02:38 GMT
  • பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
  • எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை:

ஜபல்பூர்- மும்பை கரிப்ரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கசாரா ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் உள்ள G-17 பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து பயணிகள் பீதியில் உறைந்தனர். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கசாரா வழித்தடத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.


Snake On A Train! "Gareeb rath mein ameer kahan se aa gaya ye?" (How has this rich one come to Gareeb Rath (name of train). The sense of humour of Indians is legendary?. Jokes apart, a snake found in Jabalpur-Mumbai Garib Rath Express. #snake #snakeVideo pic.twitter.com/xLP9T2A3cD



Tags:    

Similar News