இந்தியா

பாராளுமன்ற தேர்தல்... ஜார்க்கண்டில் 29.55% வாக்குப்பதிவு

Published On 2024-06-01 06:44 GMT   |   Update On 2024-06-01 06:44 GMT
  • 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
  • காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

ஜார்க்கண்ட்:

பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 57 தொகுதிகளில் 26.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பீகார்- 24.25 சதவீதம்

சத்தீஸ்கர் - 25.03 சதவீதம்

இமாச்சல பிரதேசம் - 31.92 சதவீதம்

ஜார்க்கண்ட்- 29.55 சதவீதம்

ஒடிசா- 22.64 சதவீதம்

பஞ்சாப்- 23.91 சதவீதம்

உத்தரபிரதேசம்- 28.02 சதவீதம்

மேற்குவங்காளம்- 28.10 சதவீதம்


Tags:    

Similar News