என் மலர்
ஜார்கண்ட்
- ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார்.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டும் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து பேசினார்.
ஜார்க்கண்டில் முதலீடு செய்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று கூறப்படுகிறது.\
- இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
- ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.
தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.
இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.
- அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
- நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்கும் முயற்சி என்று சாட்டியுள்ளது.
ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா. தான் ஐஐடி ராஞ்சி மாணவர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் இருந்தபோது ஹேக்கிங் மூலம் யாரோ ஆபாசப் படத்தை ஒளிபரப்பினர் என்ற குற்றச்சாட்டை சாம் பிட்ரோடா முன்வைத்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, "பிப்ரவரி 22 அன்று, 'இந்தக் கொந்தளிப்பான காலங்களில் காந்தியின் பொருத்தம்' என்ற தலைப்பில் (ஜார்கண்ட் மாநிலம்) ராஞ்சி IIT- யை சேர்ந்த பல நூறு மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
யாரோ ஒருவர் ஹேக் செய்து ஆபாசப் படங்களை காட்டத் தொடங்கினார். இதனால் மீட்டிங் பாதியில் நின்றது. இதுதான் ஜனநாயகமா, இது நியாயமா?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. ராஞ்சியில் ஐஐடி இல்லை, எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
ராஞ்சியில் ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) உள்ளது. ஆனால் சாம் பிட்ரோடாவை எந்த மாநாட்டு-கருத்தரங்கிற்கும் நேரில் அல்லது ஆன்லைன் விரிவுரை வழங்க அழைக்கவில்லை என்பதையும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) பிம்பத்தை கெடுக்க முயன்ற ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் சாம் பிட்ரோடா அதற்கு பொறுப்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
- ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் மகா சிவராத்திரி விழாவுக்கான அலங்கார பணிகளை மேற்கொள்வதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் இச்சாக் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தும்ரானில் உள்ள இந்துஸ்தான் சவுக்கில் கலவரமானது வெடித்துள்ளது.
மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு கொடி மற்றும் ஒலிபெருக்கியை நிறுவ முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மற்றொரு சமூகத்தினர் அதை எதிர்த்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது கலவரமாக மாறி கடைகளுக்கு தீ வைப்பு மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், டெம்போ மற்றும் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கடையையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.
தகவல் கிடைத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஐபிஎஸ் ஸ்ருதி அகர்வால் தெரிவித்தார். மக்கள் அமைதியைக் காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலில் எம்.எஸ்.டோனி பிரார்த்தனை செய்தார்.
- எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ராஞ்சி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.டோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன்மூலம் எம்.எஸ்.டோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.டோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.
- ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் நிறைவு பெற்ற தினத்தில் மகிழ்ச்சியில் வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.
இதைப்பார்த்த அந்த பள்ளியின் முதல்வர், அவர்களை அழைத்து கண்டித்தார். அத்துடன் அவர் மாணவிகளுக்கு கொடுத்த தண்டனைதான் கொடூரமானது. அதாவது சட்டையில் மாணவிகள் எழுதியதால், அவர்களின் சட்டைகளை களைந்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.
இப்படி சுமார் 80 மாணவிகள் தங்களது மேல் சட்டைகள் இன்றி தங்களது வீடுகளுக்கு சென்றனர். மேல் சட்டை இல்லாமல் பிளேசர் மட்டுமே அவர்கள் அணிந்தவாறு அவர்கள் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது, சம்பந்தப்பட்ட முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.
ஆனாலும் பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை. முதல்வர் மீது ஜோராபோகர் போலீசில் புகார் செய்தனர்.
இதுபற்றி தன்பாத் மாவட்ட கலெக்டர் மாதவி மிஸ்ரா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் துணைப்பிரிவு நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஆகியோர் உள்ளனர். விசாரணை குழுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாரியா தொகுதி எம்.எல்.ஏ. ராகினி சிங், இது வெட்கக்கேடான சம்பவம் என்றார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.
- தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் சார்வாஹா கிராமத்தில் உள்ள சுந்தர் கர்மாலி (27) என்பவருக்கும் அவரது மனைவி ரூபா தேவிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஆத்திரமடைந்த கர்மாலி தனது மோட்டார் சைக்கிளை கிணற்றில் தள்ளி விட்டார்.
பின்னர் உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் அவர் மேலே வரவில்லை. அவரது மனைவி ரூபா அலறல் சத்தம் கேட்டு 4 பேர் கர்மாலியை மீட்க முயன்றனர்.
உடனே அந்த 4 பேரும் கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் அதன்பின்னர் அந்த 4 பேரும் மேலே வரவில்லை. அவர்களும் உயிரிழந்தனர்.
தகவலின் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நால்வரும் ராகுல் கர்மாலி, வினய் கர்மாலி, பங்கஜ் கர்மாலி மற்றும் சூரஜ் பூயான் என அடையாளம் காணப்பட்டனர்.
கிணறு மூடப்பட்டு அதன் அருகே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கிணற்றுக்குள் குதித்தவர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
- ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 20 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததை அடுத்து, கவர்னர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கவர்னரின் ஒப்புதலை அடுத்து, ஜார்க்கண்டில் நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் சோரன் இன்று முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
ஆளுநர் சந்தோஷ் குமார் கங்குவார் பதவி பிரமாணமும் ரகசகய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
- காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளது.
- பெண்ணின் தாயாரை வரவழைத்து கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
ராஞ்சி:
திருமணம் செய்யாமல் 'லிவ்-இன்' உறவில் இருந்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (வயது25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பி உள்ளார்.
திருமணமான இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் தனது திருமணத்தை மறைத்து அந்த பெணணுடன் பழகி வந்த அவர் தனியாக அந்த பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 8-ந்தேதி அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணை ஜோர்டாக் கிராமத்தில் தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை கற்பழித்த நரேஷ் பெங்ங்ரா, அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.
இந்த நிலையில் காட்டுப் பகுதியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்துள்ளது. அவற்றை நாய்கள் கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்ததை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து பெண்ணின் தாயாரை வரவழைத்து கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
இதில் அந்த பெண் நரேஷ் பெங்ராவுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்ததும், சம்பவத்தன்று நரேஷ் பெங்ராவுடன் குடித்தனம் நடத்த போவதாக கூறி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நரேஷ் பெங்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
- 2 சம்மன்களில் மட்டுமே ஹேமந்த் சோரன் ஆஜரானார்.
ராஞ்சி:
ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த முறை ஹேமந்த் சோரன் முதல்-மந்திரியாக இருந்த கால கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 10 முறை சம்மன்கள் அனுப்பியது. இதில் 2 சம்மன்களில் மட்டுமே அவர் ஆஜரானார். மற்ற சம்மன்களை அவர் ஏற்கவில்லை.
இது தொடர்பாக அவர் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நேற்று ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது. அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.