இந்தியா

எல்லையில் படைகள் வாபஸ், கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி: மந்திரி ஜெய்சங்கர்

Published On 2024-10-27 01:38 IST   |   Update On 2024-10-27 01:38:00 IST
  • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
  • அப்போது அவர், எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கம் என்றார்.

மும்பை:

சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்தியா, சீன பிரதமர்கள் எல்லை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் அடிப்படையில், இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது நிலைகளில் இருந்து பின்வாங்கி உள்ளனர். இதனால் எல்லையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள புனே பிளேம் பல்கலைக்கழகத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

எல்லையைப் பாதுகாப்பதே நமது முதன்மையான நோக்கமாகும். இது எல்லாம் ஒரு இரவில் நடந்துவிடாது. விரிவான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அவசியம்.

சீனா எல்லையில் படைகளை நிலைநிறுத்துவதற்கு பட்ஜெட்டில் 5 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால் கடும் குளிரிலும் நமது வலிமையைக் காட்ட முடிந்தது.

எல்லையில் இயல்வு நிலை திரும்புவதற்கு மத்திய அரசு, ராணுவம் உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியே காரணமாக இருந்தது என தெரிவித்தார்.

Tags:    

Similar News