விளையாட்டு (Sports)

பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2024-07-31 09:22 GMT   |   Update On 2024-07-31 10:51 GMT
  • இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
  • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென், அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

இறுதியில், லக்ஷயா சென் 21-18, 21-12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News