உலகம் (World)

நாயை கரடியாக்கி காட்சிக்கு விட்ட சீன பூங்கா- வீடியோ வைரல்

Published On 2024-09-21 01:59 GMT   |   Update On 2024-09-21 01:59 GMT
  • ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
  • சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

பாண்டாக்களின் பூமியாக கருதப்படுகிறது சீனா. ஆனால் அங்கு நிஜ பாண்டாக்களுக்குப் பதிலாக நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.

ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வைக்கு விடப்பட்டிருந்த பாண்டாக்களில் ஒன்று நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்கும் காட்சியும், திடீரென நாய்போல குரைக்கத் தொடங்கியதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

அப்போதுதான் அது வர்ணம் பூசப்பட்ட நாய் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கூண்டில் இருந்த நாய்க் கரடிகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வைரலாக்கினார்கள். அது உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. அதன்பிறகு பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு பெயிண்ட் பூசிய உண்மையை ஒப்புக்கொண்டது. சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News