என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மாரி செல்வராஜ் படத்தை பார்த்ததும் ரொம்ப பாரமா இருந்தது - ஹரிஷ் கல்யாண்
- இவ்வளோ நெருக்கமான விசயத்தையும், உருக்கமாக விசயத்தையும் எப்படி தாங்குறீங்க மாரி செல்வராஜ்.
- 30 வருடம் தான் இந்த வாழை என்று எனக்கு தோன்றியது.
சென்னை:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:-
இந்த படத்தை பார்த்த பிறகு ரொம்ப பாரமா இருந்தது. இவ்வளவு நெருக்கமான விசயத்தையும், உருக்கமாக விசயத்தையும் எப்படி தாங்குறீங்க என்று நான் மாரி செல்வராஜிடம் கேட்டேன். அதற்கு அவர் 30 வருடம் ஆசுப்பா என்று கூறியுள்ளார். அந்த 30 வருடம் தான் இந்த வாழை என்று எனக்கு தோன்றியது.
எதார்த்தம் எப்போது அழகானது. அந்த எதார்த்தம் அவர் வாழ்க்கையில் நடத்த ஒரு விசயத்தை வைத்து இவ்வளோ அழகாக படத்தை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சொல்ல வயது இல்லை, நன்றியே சொல்லிக்கிறேன்.
தமிழ் சினிமாக்கு இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு நன்றி. இத்திரைப்பத்தில் 2 குட்டி பையன் பொன் வேல், ராகுல் மிக அருமையாக நடித்துள்ளார்கள். அவர்கள் இருவரும் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இத்திரைப்படம் ஒரு அருமையான படைப்பு. மாரி வெல்வராஜ் சார்-க்கும் அவரது டீம்-க்கும் நன்றி. எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள், நன்றி என்றும் என் அன்பு மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்