search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அருள்நிதியின் அடுத்த படத்தை எடுக்கும் `மகாராஜா தயாரிப்பு நிறுவனம்
    X

    அருள்நிதியின் அடுத்த படத்தை எடுக்கும் `மகாராஜா' தயாரிப்பு நிறுவனம்

    • அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார்.
    • பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார் அருள்நிதி.

    அதற்கடுத்து தகராறு,டிமான்டி காலனி, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் , தேஜாவு என வித்தியாசமான கதைகளில் நடித்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கழுவேத்தி மூர்கன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது டிமாண்டி காலனி பாகம் இரண்டில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அருள்நிதியை வாழ்த்தி பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி படக்குழுவும் அருள்நிதியை வாழ்த்தி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5.01 மணிக்கு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×