search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷின் குட்டி ஸ்டோரி
    X

    சர்ச்சை பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷின் குட்டி ஸ்டோரி

    • இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

    தனுஷ் அவரது ஐம்பவதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரகுமான், துஷரா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்,

    இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டனர். தனுஷ் அவர்களது இன்ஸிபிரேஷன் எனவும் அவரிடம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டோம் என நடிகர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில் அவர் ஏன் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் என்ற காரணத்தை அவர் கூறினார்.

    சென்னை: நடிகர் தனுஷுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்கிற வெறியில் தான் அவர் போயஸ் கார்டனில் வீடு கட்டினார் என செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் வீடியோக்களில் பேசி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தனுச் பதிலளித்துள்ளார்.

    `தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என போயஸ் கார்டனுக்கு சென்றேன். போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு அங்க தான் இருக்கு சைலன்ட்டா பார்த்து விட்டு போயிடணும்னு சொன்னாங்க, நானும் தலைவர் வீட்டை பார்த்து விட்டு சந்தோஷமாக திரும்பினால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம். அது யாரு வீடுன்னு கேட்டதற்கு ஜெயலலிதாம்மா வீடுன்னு சொன்னாங்க, அப்படியே வியந்து போய் விட்டேன். இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதாம்மா வீடு நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என தனுஷ் சொல்வதற்கு முன்பாகவே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

    அதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் " நான் யாருன்னு எனக்கு தெரியும், ன்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்" என பேசி தனுஷ் அவரை பற்றி தவரான விமர்சனம் வைக்கும் பல நபர்கலின் வாயை அடைத்துள்ளார்.

    தனுஷ் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×