search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினாரா சிவகார்த்திகேயன்? - இணையத்தில் மோதும் ரசிகர்கள்
    X

    தனுஷ் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினாரா சிவகார்த்திகேயன்? - இணையத்தில் மோதும் ரசிகர்கள்

    • சிவகார்த்திகேயன் பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    • எதிர் நீச்சல் திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார்.

    கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    சிவகார்த்திகேயன் இதன்மூலம் நடிகர் தனுஷை குறி வைத்து கூறுகிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்தாலும். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றும் வணிக ரீதியாகவும் பெரும் வசூல் செய்யவில்லை.

    தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.

    2013 ஆம் ஆண்டு வெளியான எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதற்கு பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை . இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.

    இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த இந்த பிரச்சனை, தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் சர்ச்சை பேச்சால் மீண்டும் அனைந்திருந்த தீ மீண்டும் எரிய தொடங்கியுள்ளது.

    இதனால் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் இடையே யார் சரி என்ற வாக்குவாதம் நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் பேசும்போது யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும். இந்த பிரச்சனை தற்பொழுது பெரிதாகி உள்ளது.

    சிவகார்த்திகேயன் மேடையில் இதைப்பற்றி பேசாமல் இருந்து இருந்தாலே எந்தவித பிரச்சனையையும் வந்திருக்காது என பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

    இதற்கான தீர்வு என்னவென்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×