search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காதலர் தினத்தில் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த சுகேஷ் சந்திரசேகர்
    X

    காதலர் தினத்தில் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த சுகேஷ் சந்திரசேகர்

    • மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சிறையில் இருந்து காதல் கடிதங்கள் எழுதி வருகிறார்.

    பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வருகிறார்.

    இதனிடையே சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதிய காதல் கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசாக கொடுத்த ஜெட் விமானத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குறிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று விமானத்தில் எழுதப்பட்டுள்ளது

    இது தொடர்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "ஜெட் விமானத்தை எனது காதலி ஜாக்குலினுக்கு அனுப்புகிறேன். இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கவில்லை.

    அடுத்த பிறவி என்று எனக்கு இருந்தால், அதில் நான் ஜாக்குலின் உடைய இதயமாகப் பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் "துடித்துக் கொண்டே இருக்க" விரும்புகிறேன். நீ என் காதலியாக இருப்பதால் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன் நான்தான். ஜாக்குலின் போன்ற மிகவும் அழகான மற்றும் அற்புதமான பெண் காதலியாக கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    பேபி, நீ எப்போதும் வேலை மற்றும் படப்பிடிப்பிற்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன், உன் பயணம் உன் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×