search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்- பெற்றோர் பேட்டி
    X

    நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்- பெற்றோர் பேட்டி

    • நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியானது சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார்.

    இந்நிலையில், விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த ஒரு மாணவியின் பெற்றோர் கூறியதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர் வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவது மிகவும் நல்ல விஷயம். தமிழ்நாட்டில் இந்த மாதிரி நல்லவர்கள் வந்து தமிழகத்துக்கு முன்னேற்றம் வந்தால் நன்றாக இருக்கும்.

    நடிகர் விஜய் கல்விக்காக முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வரட் டும். வந்தால் நல்லதுதான். இவரை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×