search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால், முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான் - செல்வராகவன் பதிவு
    X

    செல்வராகவன்

    யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால், முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான் - செல்வராகவன் பதிவு

    • செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது செல்வராகன் புதிய படக்கும் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது புதிய படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    செல்வராகவன்

    இந்நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதில், "இங்குத் தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்துக் கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்" என்று குறிப்பிட்டிருப்பது திரையுலக வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×