search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார்- கனடா வீரர்
    X

    டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார்- கனடா வீரர்

    • டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர்.
    • இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டி அணியாக களம் இறங்கியது கனடா. இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் "ஏ" அணியில்தான் கனடாவும் இடம் பிடித்துள்ளது.

    கனடா அணி சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்த போதிலும், அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு எதிராக குறைவான ரன்கள் அடித்த போதிலும், 17 ஓவர் வரை வெற்றிக்கான போராடியது.

    இன்று கடைசி லீக்கில் இந்திய அணியுடன் கனடா மோதுகிறது. இந்த நிலையில் அந்த அணியின் ஆரோன் ஜான்சன் கூறுகையில் "இந்திய கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் டோனி இந்திய கிரிக்கெட்டையே மாற்றியவர். இளம் படையை கொண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளார். டோனி இல்லை என்றால் சச்சின் உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருக்க மாட்டார் என்பது என் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர் 1996-ல் இருந்து உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 2011-ம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடும்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வீரரான ஆரோன் ஜான்சன் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்தில் 52 ரன்கள் விளாசினார்.

    Next Story
    ×