search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை

    • சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
    • 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.

    முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.

    விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

    அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×