search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    Emotional ஆன இந்திய வீரர்கள்: வைரலாகும் வீடியோ
    X

    Emotional ஆன இந்திய வீரர்கள்: வைரலாகும் வீடியோ

    • பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
    • அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

    ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×