search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கனடாவில் குடியேற விரும்பிய பும்ரா...
    X

    கனடாவில் குடியேற விரும்பிய பும்ரா...

    • ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-

    ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.

    அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.

    Next Story
    ×