search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒரே நாளில் 600 ரன்கள் வரை எங்களால் குவிக்க முடியும்- ஒல்லி போப்
    X

    ஒரே நாளில் 600 ரன்கள் வரை எங்களால் குவிக்க முடியும்- ஒல்லி போப்

    • கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம்.
    • சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்துள்ளது. முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 416 ரன்கள் குவித்து அசத்தியது. மேலும் டெஸ்ட் வரலாற்றில் 4.2 ஒவர்களில் 50 கடந்து வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 500 முதல் 600 ரன்கள் வரை எங்களால் அடிக்க முடியும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.

    உண்மையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி, 2022 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் தொடக்க நாளில் 506 ரன்கள் குவித்தது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதன் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களை எடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    உண்மையில் அதிமான ரன்கள் அடிக்க ஆவலாக இருக்கிறது. பசி என்றே சொல்லாம். தற்போது அதிகமான பசி இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும்.

    இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம்.

    இவ்வாறு போப் கூறினார்.

    Next Story
    ×