search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கனடா லீக் தொடரில் பங்கேற்க பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு அனுமதி மறுப்பு
    X

    கனடா லீக் தொடரில் பங்கேற்க பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு அனுமதி மறுப்பு

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேச அணி, அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக, கனடிய லீக் தொடர் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்க முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோருக்கு என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு பாலிசியின்படி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதே என்ஓசி மறுக்கப்படக் காரணம் என கூறிய பிசிபி, வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். அளவுகோல்களுக்கு பொருந்தாத வீரர்களுக்கு இடமில்லை. ஒழுக்கத்திலும் எந்த சமரசமும் இருக்காது என தெரிவித்துள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×