search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒருவேலை இருக்குமோ.. சிஎஸ்கே அணியில் ரோகித்? மனைவியின் சூசக தகவல்
    X

    ஒருவேலை இருக்குமோ.. சிஎஸ்கே அணியில் ரோகித்? மனைவியின் சூசக தகவல்

    • ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது.
    • அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் தலைமையிலான மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

    இதனிடையே, மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா 2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். அவரை சமீபத்தில் குஜராத் அணியிடமிருந்து அதிக தொகைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.

    இந்த சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்துள்ளது. அதேவேளை, கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவி பறிபோனதையடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவருக்கு புகழாரம் சூட்டி ஒரு பதிவு வெளியிட்டது. அந்த பதிவிற்கு ரோகித் மனைவி ரித்திகா சஜ்தே கமெண்ட் செய்துள்ளார். அதில் மஞ்சல் நிற இதய எமொஜியை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முன்னதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்திரநாத் எக்ஸ் தள பதிவில் ரோகித் சர்மாவை சிஎஸ்கே ஜெர்சியில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×