என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ரோகித் நீக்கத்திற்கு காரணம் கூறிய பயிற்சியாளர்? ரித்திகா பதிலடி
- இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
- கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ரோகித் ரசிகர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள கணக்கை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார்கள்.
இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பவுச்சர் கூறியதாவது:-
இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டை வைத்து எடுக்கப்பட்ட முடிவு. பாண்டியாவை ஒரு வீரராக முதலில் நாங்கள் வாங்க நினைத்தோம். தற்போது அணி மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இதனால்தான் நாங்கள் புதிய கேப்டனை நியமித்துள்ளோம்.
இந்த முடிவை இந்தியாவில் பல ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். தற்போது கேப்டனாக இல்லாமல் வெறும் ஒரு வீரராக ரோகித் விளையாடினால் அவரின் பல திறமைகள் பேட்டிங்கில் நிச்சயம் வெளிப்படும். ரோகித் தற்போது களத்திற்கு சென்று எந்த நெருக்கடியும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து ரன்களை சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ரோகித் சர்மா ஒரு மிக சிறந்த நபர். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல ஆண்டு காலம் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து இருக்கிறார்.
கேப்டன் என்ற எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர் களத்தில் சாதாரண வீரராக விளையாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். இருப்பினும் அவர் இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக இருக்கிறார். இதனால் அவருக்கான மவுசு என்றுமே குறையாது. ஐபிஎல் தொடருக்கு வரும் போது கேப்டனாக மேலும் அவருடைய நெருக்கடி அதிகரிக்கும். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆக ரோகித் சர்மாவை நாம் பார்க்க முடியும். அவருடைய முகத்தில் சிரிப்பு வரவேண்டும் என்பது எனது ஆசை.
என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.
இதற்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இதில் பல தவறுகள் இருக்கிறது என பதிவிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்