search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை
    X

    மகளிர் ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை

    • முதலில் ஆடிய தாய்லாந்து 93 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இலங்கை 94 ரன்களை எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. அந்த அணியின் கன்னாபட் கொஞ்சாரோஎன்கை

    ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இறுதியில், தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து, 94 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இதனால் இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 49 ரன்னும், விஷ்மி குணரத்னே 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தாய்லாந்து அணி தோற்று தொடரில் இருந்து வெளியேறியதால் வங்காளதேசம் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×