search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 96 ரன்னில் சுருண்டது அயர்லாந்து
    X

    இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 96 ரன்னில் சுருண்டது அயர்லாந்து

    • ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.

    கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×