search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டிஎன்பிஎல்: நெல்லை அசத்தல் பந்து வீச்சு- 126 ரன்கள் எடுத்த மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல்: நெல்லை அசத்தல் பந்து வீச்சு- 126 ரன்கள் எடுத்த மதுரை பாந்தர்ஸ்

    • மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி மதுரை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கேப்டன் ஹரி நிசாந்த் களமிறங்கினர். கார்த்திக் ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபன் லீங்கேஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து நிசாந்த் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடி வந்த சுந்தர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் நிசாந்த் அரை சதம் கடந்தார். இவர் 64 ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் முறையில் விக்கெட்டை இழந்தார்.

    கடைசி ஓவரில் பொய்யாமொழி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பிரசாத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×