search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நான்கு பெரிய கோபுரங்களை கொண்ட தாழக்கோவில்
    X

    நான்கு பெரிய கோபுரங்களை கொண்ட தாழக்கோவில்

    • இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.
    • கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.

    வேதகிரீசுவரர் குடைவரை கோவிலை வணங்கி கொண்டு இறங்கி ஊருக்குள் சென்றால் தாழக்கோவிலை அடையலாம்.

    இந்த தாழக்கோவில் மிகவும் பெரியது. 4 பெரிய கோபுரங்களை கொண்டது.

    கீழ்க்கோபுரம் ஒரு வைணவ அன்பரால் கட்டப்பட்டது என்று கூறுவர். இங்குள்ள ஆமை மண்டபம் பெரியது.

    இத்திருக்கோவிலில் இறைவன், பக்தவச்சலர் என்னும் திருப்பெயரில் எழுந்தருளியுள்ளார்.

    இக்கோவிலில் அம்பிகை பெயர் திரிபுரசுந்தரி.

    மலை மேல் உள்ள வேதகிரீசுவரர் கோவிலில் அம்பிகை, பெண்ணின் நல்லாள் என்னும் திருப்பெயர் பூண்டு எழுந்தருளி, பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றாள்.

    இவ்வம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். தாழக்கோவிலினுள் நந்தி தீர்த்தம் என்னும் குளம் உள்ளது.

    தாழக் கோவில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    மலைக்கோவில் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் ராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது.

    Next Story
    ×