search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பொருத்தட்டுவிளை அய்யா வைகுண்ட பதியில் திருஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது
    X

    பொருத்தட்டுவிளை அய்யா வைகுண்ட பதியில் திருஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது

    • ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
    • 8-ந்தேதி பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடக்கிறது.

    புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்ட பதியில் மார்கழி திருஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜனவரி 8-ந்தேதி வரை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை. உகப்பெருக்கு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5.30 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.

    ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதிவலமும், திருதேர் வீதிஉலாவும், 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடைபெறுகிறது.

    Next Story
    ×