என் மலர்
வழிபாடு

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 13-ந்தேதி சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
- வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தை மாதம் 1-ந் தேதி பொங்கலன்று நடைபெற உள்ள தைத்தேரோட்டத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இந்த ஆண்டு தேரோட்டம் வருகிற 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முன் தினம் தேர் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் உபயதாரர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (சனிக்கிழமை) கொடியேற்றமும், 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கருட வாகன வீதிஉலாவும், 13-ந் தேதி சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளைக் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story






