என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![முருகனின் அறுபடை வீடுகளும்.. விளக்கமும்... முருகனின் அறுபடை வீடுகளும்.. விளக்கமும்...](https://media.maalaimalar.com/h-upload/2022/10/26/1782041-murugan-arupadai-veedu.jpg)
முருகனின் அறுபடை வீடுகளும்.. விளக்கமும்...
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம்.
- பழத்திற்காக சண்டை போட்ட இடம் பழனி.
புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை( அறுபடை வீடு ) என்று அழைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை : தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.
திருத்தணி: சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை: அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.