search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று நாகசதுர்த்தி: நாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்து வழிபாடு
    X

    இன்று நாகசதுர்த்தி: நாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்து வழிபாடு

    • ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி.
    • நாக வழிபாடு செய்வது அவசியம்.

    ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்த குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.

    ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித்தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக்கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்த பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர்.

    இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. அதில் தெற்கே நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.

    நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு-கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம்.

    அரச மரத்தடி, வேப்பமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள நாக பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    Next Story
    ×