என் மலர்tooltip icon

    வழிபாடு

    பஞ்ச நமஸ்காரங்கள்
    X

    பஞ்ச நமஸ்காரங்கள்

    • சாஸ்திர ரீதியாக ஐந்து வகையான முறையில் இறைவனை வணங்கலாம்.
    • பஞ்ச நமஸ்காரங்களை பற்றி பார்ப்போம்.

    கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் முறைகளில் வேறுபாடு இருக்கும். சாஸ்திர ரீதியாக ஐந்து வகையான முறையில் இறைவனை வணங்கலாம் என்கிறார்கள். இதனை 'பஞ்ச நமஸ்காரங்கள்' என்று அழைக்கிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.

    ஏகாங்க நமஸ்காரம்: தலை மட்டும் குனிந்து வணங்குதல்

    துவிதாங்க நமஸ்காரம்: இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல்

    பஞ்சாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், சிரசு ஆகிய ஐந்து அங்கங்களும் பூமியில் பதிய வணங்குதல். இதனை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

    சாஷ்டாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், சிரசு, மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்.

    அஷ்டாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், இரு செவிகள், சிரசு, மார்பு என எட்டு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்.

    Next Story
    ×