search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா 25-ந்தேதி தொடக்கம்
    X

    நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா 25-ந்தேதி தொடக்கம்

    • ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 3-ந்தேதி பூக்குழி இறங்குதல் நடக்கிறது.

    சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்த விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 24-ந்தேதி மாலை அனுக்கை மற்றும் விக்னேஸ்வர பூஜை, சாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 25-ந்தேதி காலை 10 மணி முதல் 11.20 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், மாலை 6.10 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு வெள்ளி கேடகத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கு வெள்ளி கேடகத்திலும், இரவு 7 மணிக்கு சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷபம், வெள்ளி குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    வரும் 31-ந்தேதி காலை சயன அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தங்க ரதத்தில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் காலையில் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி உற்சவ சாந்தியும், மாலையில் வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் மெ.ராம.முருகப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×