என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாரமங்கலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    தாரமங்கலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்

    • பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த தேர்த்திருவிழாவானது, நான்கு கோடி மகாஜனங்கள், மிராசுதாரர்கள், கட்டளைதாரர்களின் ஒத்துழைப்போடு பெரியாம்பட்டி, சிக்கம்பட்டி, பொத்தியாம்பட்டி, கருக்கப்பட்டி நாடார் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு பூத வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது, இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, தேரில் எழுந்தருளிய பத்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தேர்நிலையம் அருகே பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது சுவாமிக்கு பூஜைகள் செய்து தீப ஆராதனை செய்து பம்பை மேளம், அதிர்வேட்டு முழங்க, மாடு ஆட்டம், ஒயிலாட்டத்துடன் இருபுறமும் குவிந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு இறுதியாக தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×