search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம்

    • ஊஞ்சல் உற்சவம் வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஊஞ்சல் உற்சவ நாட்களில் மூலவர் சேவை கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரெங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×