என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-11 ஏப்ரல் 2025
- இன்று பங்குனி உத்திரம்.
- திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-28 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: சதுர்த்தசி நாளை விடியற்காலை 4.12 மணி வரை. பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.11 மணி வரை. பிறகு அஸ்தம்.
யோகம்: சித்த, அமிர்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பங்குனி உத்திரம். சுபமுகூர்த்த தினம். திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள் ரதோற்சவம். திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் திருக்கல்யாணம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. மதுரை சமீபம் சோலைமலை ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பதினாறு வகையான அபிஷேக காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் ரதோற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி பாகம்பிரியாள் வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நலம்
மிதுனம்-நட்பு
கடகம்-தனம்
சிம்மம்-அமைதி
கன்னி-உயர்வு
துலாம்- மேன்மை
விருச்சிகம்- போட்டி
தனுசு- வெற்றி
மகரம்-செலவு
கும்பம்-வரவு
மீனம்-தியாகம்






