என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 2 ஏப்ரல் 2025
- இன்று வசந்த பஞ்சமி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-19 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி காலை 7.45 மணி வரை பிறகு பஞ்சமி பின்னிரவு 4 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: கார்த்திகை நண்பகல் 1.51 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வசந்த பஞ்சமி. திரிசிராமலை, கழுகுமலை, கங்கை கொண்டான், திருச்சுழி, காஞ்சீபுரம் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். நேச நாயனார் குரு பூஜை. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. நான்காம் நவதிருப்பதி புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-வெற்றி
கடகம்-ஆதரவு
சிம்மம்-வெற்றி
கன்னி-மாற்றம்
துலாம்- சலனம்
விருச்சிகம்-கவனம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-அன்பு
கும்பம்-உற்சாகம்
மீனம்-அமைதி






