என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-8 ஏப்ரல் 2025
- இன்று சர்வ ஏகாதசி.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-25 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.18 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் ஆழித்தேரோட்டக் காட்சி. காஞ்சீபுரம் ஏகாம்பரேசுவரர் ரதோற்சவம். பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. கழுகுமலை ஸ்ரீ முருக பெருமான் புறப்பாடு கண்டருளல். தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் புஷ்பச் சப்பரத்தில் தீர்த்தவாரி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-தனம்
மிதுனம்-வெற்றி
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-நிம்மதி
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- ஆதரவு
மகரம்-ஆர்வம்
கும்பம்-செலவு
மீனம்-அமைதி






