search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கோபா அமெரிக்கா: சிலியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா
    X

    கோபா அமெரிக்கா: சிலியை 1-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

    • மோதிய இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    • சிலி, கனடா, பெரு அணிகள் காலிறுதிக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் கடுமையாக போராடும் நிலை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா- சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. அந்த அணியின் மார்ட்டினேஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த வெற்றியின் மூலம் "ஏ" பிரிவில் அர்ஜென்டினா இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    3 அணிகளின் காலிறுதி வாய்ப்பு

    சிலி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. பெரு ஒரு தோல்வி, ஒரு டிரா உடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கின்றன.

    அர்ஜென்டினா பெருவை எதிர்கொள்கிறது. கனடா சிலியை எதிர்கொள்கிறது. கனடாவுக்கு எதிராக சிலி வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முன்னேற முடியும். டிரா செய்தால் கனடா முன்னேறி விடும்.

    அதேபோல் அர்ஜென்டினாவுக்கு பெரு அதிர்ச்சி அளித்து, கனடா தோல்வியடைந்தால் சிலி, பெரு இடையே கோல் அடிப்படையில் காலிறுக்கு முன்னேறும் போட்டி நீடிக்கும்.

    கனடா- பெரு போட்டி

    மற்றொரு போட்டியில் கனடா- பெரு அணிகள் மோதின. இதில் கனடா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பெரு வீரர் மிகுயேல் அராயுஜோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் பெரு 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கனடா 74 நிமிடத்தில் கோல் அடித்தது. ஜோனாதன் டேவிட் இந்த கோலை அடித்தார்.

    Next Story
    ×