search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
    X

    குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்

    • நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
    • நடப்பது, நமது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன.

    நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது.

    விளையாட்டு பயிற்சிகள் இல்லாத சமயங்களில், நடைபயணம், நடைப்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சியால், ரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன், உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு, வளர்சிதை மாற்றும் அதிகரித்து, ஜீரண சக்தி மேம்படுகிறது. நடப்பது, நமது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடல் வலிமைக்கு வித்திடுகிறது.

    * அதிகாலையில் நடைபயணம் ஏன்..?

    அதிகாலையில் எழுந்து நடக்க வேண்டும் என்று, எதற்காக வலியுறுத்துகிறார்கள் என்றால், சுத்தமான காற்றை சுவாசிக்க வழி வகுக்கும். அதிகாலையில் எழுந்தாலே, அன்றைய நாளின் சோம்பலை முற்றிலுமாக தவிர்க்க முடியும். பள்ளிகளில், கவனத்தை செலுத்த வாய்ப்பு ஏற்படும். சிறுகுழந்தைகள் மத்தியிலும், இதே நடைமுறையை, மெல்ல மெல்ல பழக்கப்படுத்தினால், அவர்களும் நாளடைவில், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தொடங்குவர்.

    இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது என்றாலும் கூட, வீட்டு வளாகத்தில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

    Next Story
    ×