search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் கண் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்
    X

    குழந்தைகளின் கண் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

    • பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள்
    • குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், டி.வி., கம்ப்யூட்டரை எப்போதும் உற்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். 3 வயதை தொடாத குழந்தைகூட மொபைல் போனுடன் நேரத்தைக் கழிக்கிறது. நம் முந்தைய தலைமுறையில் இவ்வளவு அதிகமான குழந்தைகள், பார்வைத்திறன் குறைபாட்டால் கண்ணாடி அணியவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை?

    ஸ்மார்ட்போனின் திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப்போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    இதைத்தவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை சூரிய ஒளி அதிகமாக சுரக்க வைக்கிறது. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்தக்காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், நீண்டநேரம் வீட்டுக்கே வராமல் கூட விளையாடினார்கள். ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான நிலை இப்போது உள்ளது.

    எனவே கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    Next Story
    ×