என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
    • காற்று சுத்திகரிப்பான அவசியம் என்ற நிலையில் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் வசூலிப்பதாக மனு.

    டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அவசரமான சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியில் இருந்து காற்று சுத்திகரிப்பானுக்கு விலக்கு அளிக்காதது மகிழ்ச்சி அளிக்கவில்லை என தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

    மேலும், முன்னதாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு, ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன், கூட்டத்தை முன்னதாக கூட்டுவது குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வருகிற 26-ந்தேதி (நாளை மறுதினம்) தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
    • இந்தி கற்கவில்லை என்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டினார்.

    டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்.

    இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,.

    இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாஜக மேலிடத்தின் வற்புறுத்தலின் பேரில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 


    • ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர்.
    • வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த ஆண்டு, இந்திய மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்விக்காக சென்ற நாடுகளில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் சென்றனர்.

    அடுத்த இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 630 மாணவர்கள் சென்றனர். இங்கிலாந்துக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களும், ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 202 மாணவர்களும் சென்றனர். ஜெர்மனிக்கு 42 ஆயிரத்து 997 இந்திய மாணவர்கள் சென்றனர். இதற்காக இந்திய மாணவர்கள் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கோடி செலவிட்டனர்.

    கடந்த 2020-ம் ஆண்டு நிலவரப்படி, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகம். அவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 614 ஆகும். பஞ்சாப், மராட்டியம் மாநில மாணவர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.

    வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.975 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுபோல், வெளிநாடுகளில் அதிக அளவில் படிப்பவர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவை சேர்ந்த 13 லட்சத்து 35 ஆயிரம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். உயர்கல்வி படிக்கும் வயதினரை (18 முதல் 23 வயது வரை) அதிகமாக கொண்ட நாடும் இந்தியா ஆகும். இங்கு அந்த வயதில் 15 கோடியே 50 லட்சம் பேர் உள்ளனர்.

    கடந்த ஆண்டு, ஒரு வெளிநாட்டு மாணவர் உயர்கல்வி படிக்க இந்தியா வந்தார் என்றால், பதிலுக்கு 28 இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு சென்றனர். எனவே, இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

    கடந்த 2021-2022 ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
    • 2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தை 125 வேலை நாட்களுடன் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடுமையான நடந்து கொண்டன. மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    ஆனாலும் ஆளும் கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆதரவோடு அதனை நிறைவேற்றிவிட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டார். விரைவில் அது சட்டமாக இருக்கிறது.

    இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல மாநிலங்களுக்கு மத்திய அரசு இன்னும் நிதி பாக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டுக்கும் நிதி பாக்கி உள்ளது.

    இது தொடர்பான விவரங்கள் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேட்ட கேள்விகள் மூலம் பதிலாக கிடைத்து உள்ளன.

    அந்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரி கமலேஷ் பஸ்வான் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், முந்தைய ஆண்டுகளின் ஏற்கத்தக்க நிலுவை பொறுப்புகள் ஏதேனும் இருந்தால், அவை மத்திய அரசாங்கத்தால் முறையாக ஈடு செய்யப்படுகின்றன.

    அதன்படி, 2024-2025 நிதியாண்டு வரையில் செலுத்தப்பட வேண்டிய மற்றும் ஏற்கத்தக்க அனைத்து நிலுவை ஊதிய பொறுப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. மேற்கு வங்காள மாநிலத்துக்கு மட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

    2024-2025-ம் நிதியாண்டில், ஊதியக்கூறுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.5,984.03 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. 2025-2026 நடப்பு நிதியாண்டில் (11-12-2025 நிலவரப்படி), தமிழ்நாட்டுக்கு ரூ.6,497.06 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் ஊதியக் கூறுக்காக ரூ.5,836.20 கோடியும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.660.86 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.

    10-12-2025 நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு ஊதியப்பணம் தொடர்பான மொத்த நிலுவைத்தொகை ரூ.304.80 கோடி ஆகும். மேலும், பொருட்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.622.21 கோடியாக உள்ளது. நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையை மாநிலத்துக்கு விடுவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

    இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.

    • பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது.
    • 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநராக இருந்து வருபவர் நடாஷா பூனாவாலா.

    நடாஷா பூனாவாலா கையில் போட்டுள்ள வைர மோதிரம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

    உங்கள் கண்களை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேளுங்கள். 126 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை பற்றி நான் பேசப்போகிறேன் என்றதும் உங்கள் நினைவில் வருவது என்ன? பாரிசின் கடைசி ராணிக்குச் சொந்தமான வைர மோதிரம் இது, மிக அரிதானது. 17 வைரங்கள் சூழ மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் ஏலத்தில் 126 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

    நடாஷா பூனாவாலா கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் மதிப்பு சுமார் 126 கோடி ரூபாய்.

    அது பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட் குடும்பத்தைச் சேர்ந்தது.

    18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய இளஞ்சிவப்பு வைரம் அதில் உள்ளது.

    சமீபத்தில் கிறிஸ்டிஸ் ஏலத்தில் $13.98 மில்லியன் (சுமார் 126 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கப்பட்டது.

    தனது அற்புதமான மற்றும் ஆடம்பரமான நகை சேகரிப்புகளுக்காகப் பெயர் பெற்றவர் நடாஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
    • முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

    நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,49,885 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769, இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.

    இதேபோல், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

    நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர், இரட்டை பதிவுகள்: 1,79,043 என தெரிய வந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

    நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்: 31.51 லட்சம், இறந்தவர்கள்: 8.46 லட்சம், இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ம.பி.யில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் என 3 மாநிலங்களில் சேர்த்து 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    • ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா.
    • டெல்லியில் பிரதமர் மோடியை நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஆகியோர் சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) ஆகவும் உள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை நீரஜ் சோபரா, தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
    • டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.

    ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

    தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.


    தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

    இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.

    பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.

    காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.


    சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.

    பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    • பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
    • பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.

    ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-

    நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.

    மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?

    இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

    • இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.
    • இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் மோடி அரசு புல்டோசரை ஏற்றி அழித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

    MGNREGA திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 'விபி ஜி ராம் ஜி, 2025' மசோதா குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

    அதில் அவர் , "இந்த மசோதா குறித்து எந்தவிதமான பொது விவாதமோ அல்லது நாடாளுமன்றத்தில் முறையான விவாதமோ நடத்தப்படவில்லை.

    மாநில அரசுகளிடம் இருந்தும் இதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இதன் மூலம் மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் நாட்டின் ஜனநாயகம் ஆகிய இரண்டின் மீதும் புல்டோசரை ஏற்றி தரைமட்டமாக்கியுள்ளது. இது வளர்ச்சி அல்ல, அழிவு.

    இதற்கான விலையைக் கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள்.

    இந்த மசோதா திட்டத்தை மேம்படுத்துவதற்காக அல்ல, மாறாக அந்தத் திட்டத்தையே சிதைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    டிசம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.  

    • பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
    • நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    ஒரு கட்சியின் வலிமையையும், அந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதுதான் தேர்தல்கள். அந்த வகையில் 2014-ல் அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா. தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடம் பதித்து நாடு முழுவதும் தனது வளர்ச்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வருகிறது.

    இப்போதைக்கு அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் மலையாள சேதத்தில் தாமரை மலர என்றுமே வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

    ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.

    2 நகராட்சிகளையும் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையையும், இடது சாரிகளுக்கு தளர்ந்துவிடாத மனநிலையை கொடுத்தாலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில் பா.ஜ.கவும் வேகமாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளது.

    எனவேதான் இந்த உள்ளாட்சி தேர்தலை 'மாற்றத்திற்கான தருணம்' என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

    நாட்டின் தென் பகுதியில் பா.ஜ.க தனது வெற்றி சரித்திரத்தை பதிவு செய்துள்ளது என்ற பேச்சு அடங்குவதற்குள் நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.

    மராட்டிய மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது.

    286 நகராட்சிகளில் 245 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது.

    அதேபோல் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிகளில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 372 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் மட்டுமல்ல இந்த ஆண்டில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் பா.ஜ.கவே வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    தலைநகர் டெல்லியை 1998-ல் பா.ஜ.க ஆண் டது. அதன் பிறகு 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பா.ஜ.கவால் வெற்றிக் கனியை ருசிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்து டன் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்.5) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முடிவுரை எழுதியது.

    மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் தலைநகர் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.

    நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் பா.ஜ.க மகத்தான சாதனை படைத்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல பீகார் மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 இடங் களை பா.ஜனதா கைப்பற்றி சாதித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிதிஷ்கு மார் கட்சி 85 இடங்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.கவே கோலோச்சியது. சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிக ளையும் பா.ஜ.க கைப் பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 173 இடங்களில் 126 இடங்கள் பா.ஜ.க வசமானது.

    உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாநகராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.கவே வென்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை தோற் கடித்து பா.ஜ.க வென்றது.

    இதே போல் ராய்ப்பூர் மாநகராட்சி தேர்தலிலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க 60 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியது.

    பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிர சுக்கு இந்த ஆண்டும் ராசி இல்லாத ஆண்டாகவே தொடங்கி முடிய போகிறது.

    அடுத்ததாக பிறக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தல்களிலும் எந்த கட்சி சாதிக்கும்? எந்த கட்சி சறுக்கும்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சி மூலம் முடிவு செய் வார்கள்.

    • இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்
    • தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்

    டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில், உள்ளூர் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்க பயிற்சியாளரிடம், நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை என கேள்வி எழுப்பினார். அவர் அதற்கு பதிலளிக்காததால், நான் சொல்வதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் ஏன் இந்தி கற்கவில்லை? ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். 

    இல்லையென்றால் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இங்கே பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், இந்தியும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்" எனப் பேசியுள்ளார். மேலும் மற்றொருவரிடம் (பூங்கா காவலாளியா என்பது சரியாக தெரியவில்லை) நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூங்கா இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். இல்லையெனில் ஏதேனும் குற்றச் செயல் நடந்தால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்,. 

    இந்த வீடியோ வைரலாக ரேணு சவுத்ரிக்கு பெரும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து வீடியோ தொடர்பாக விளக்கமளித்த அவர், பூங்காவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்தது. அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல்தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்" என தெரிவித்துள்ளார்.


    ×