search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டியில்  மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
    X

    விக்கிரவாண்டியில்  மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா.

    விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

    • உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு மேற்பார்வையாளர் உமாதேவி தலைமை தாங்கினார்.
    • ஆசிரியர் சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வட்டார வளமையத்தில் உலக ஆட்டிச தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு மேற்பார்வையாளர் உமாதேவி தலைமை தாங்கினார். நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர் ரேவதி வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். இதில் மாற்றுத் திறனாளிகள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×